விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
#SriLanka
#Warning
#ImportantNews
#Public
#Fever
#L4
Lakhi
3 hours ago
புத்தாண்டு காலங்களில் நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டுகளின் போது, எலி காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரப் பரிசோதகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பெரும்பாலான புத்தாண்டு நிகழ்வுகள் நீர் நிலைகள், சிறிய குளங்கள் மற்றும் வயல்வெளிகளுக்கு அருகாமையில் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இவ்வாறான பகுதிகளில் விளையாட்டுகளில் ஈடுபடுவது எலி காய்ச்சலை உண்டாக்கும் கிருமிகளுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தி, நோய் பரவும் வாய்ப்பை அதிகப்படுத்துவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
(வீடியோ இங்கே )