சர்ச்சையில் சிக்கிய அமெரிக்காவின் கூட்டாட்சி புலனாய்வுப் பணியக தலைவர் காஷ் படேல்
அமெரிக்காவின் கூட்டாட்சி புலனாய்வுப் பணியக(FBI) இயக்குனர் காஷ் படேல், தனது இளமைக் காலத்தில் இரண்டு முறை கைது செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஒருமுறை வர்ஜீனியாவில் பொது இடத்தில் போதையில் இருந்ததற்காகவும், மற்றொரு முறை அவர் சட்ட மாணவராக இருந்தபோது நியூயார்க் நகரத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியிலிருந்து வெளியேறிய பிறகு பொது இடத்தில் சிறுநீர் கழித்ததற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
படேல் பணிபுரிந்த மியாமி-டேட் பொதுப் பாதுகாவலர் அலுவலகத்தில், 2005ம் ஆண்டில் அவரது தனிப்பட்ட கோப்பின் ஒரு பகுதியாக அவர் எழுதிய கடிதத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
படேலின் செய்தித் தொடர்பாளரான எரிக்கா நைட், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, இந்தத் தாக்குதல்கள், அவர் பதவிக்குத் தகுதியானவர் என்று ஏற்கனவே தீர்மானித்த ஒரு செயல்முறையைச் சீர்குலைக்கும் முயற்சியும், இயக்குநர் படேலின் கீழ் FBI அடைந்துவரும் சாதனை வெற்றியிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு செயலுமே தவிர வேறொன்றுமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
படேல் FBI இயக்குநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவரது முழுப் பின்னணியும் முழுமையாக ஆராயப்பட்டு சரிபார்க்கப்பட்டது என்றும் நைட் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )