நியூ மெக்ஸிகோவிற்கு அச்சுறுத்தல் விடுத்த மெட்டா நிறுவனம்
மெட்டா நிறுவனம் தனது தளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக, அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றுக்கான அணுகலைத் தடுக்கக்கூடும் என எச்சரித்துள்ளது.
நியூ மெக்சிகோவின் தலைமை வழக்கறிஞரால் தொடரப்பட்ட ஒரு முக்கிய வழக்கில், அந்நிறுவனம் பொறுப்புடையது என நடுவர் மன்றம் கண்டறிந்ததைத் தொடர்ந்து, சமீபத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனம் பாதுகாப்பு குறித்து பயனர்களைத் தவறாக வழிநடத்தியதாகவும், குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் உள்ளிட்ட தீங்குகளை அனுமதித்ததாகவும் கூறி, நீதிமன்றம் 375 மில்லியன் டாலர் சிவில் அபராதம் விதித்தது.
இந்நிலையில், நியூ மெக்சிகோ தலைமை வழக்கறிஞர் ரவுல் டோரெஸ் இந்த அச்சுறுத்தலை ஒரு “மக்கள் தொடர்பு தந்திரம்” என்று கூறி நிராகரித்தார்.
பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தும் திறன் மெட்டா நிறுவனத்திற்கு உள்ளது.
(வீடியோ இங்கே )