இவ்வார பாராளுமன்ற கூட்டத்தொடர்: வியூகம் வகுக்கும் எதிர்க்கட்சிகள்!
இவ்வார பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் முன்னெடுப்புகள் தொடர்பாக எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் விசேட கலந்துரையாடல் இன்று (05) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டார். சபையின் தற்போதைய போக்கு மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் சபையில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் தனது ஆக்கபூர்வமான கருத்துகளை முன்வைத்தார்.
பாராளுமன்ற அமர்வுகளின் போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான பொதுவான இணக்கப்பாடுகளை எட்டுவதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
இவ்வார பாராளுமன்ற அமர்வுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று கூடி ஆராய்ந்தனர். இதில் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன?
(வீடியோ இங்கே )