கைபேசி கவர் மூலம் போதைப்பொருள் கடத்தல்: சிக்கிய இளம் துறவி!
#SriLanka
#Arrest
#Young
#Lanka4
#Mobile
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
மெனிக்ஹின்ன,ஹுரிகடுவ பகுதியில் உள்ள ஒரு விகாரையில் பணியாற்றி வருவதாகக் கூறப்படும் 23 வயது இளம் துறவி ஒருவர் ரங்கலா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 10 கிராம் 'ஐஸ்' அல்லது கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டபோது, அந்த போதைப்பொருள் அவரது கைபேசியின் பின்பக்க உறைக்குள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர். ஜயந்த சமரக்கோனின் அறிவுறுத்தலின் பேரில், ரங்கலா பொலிஸ் நிலைய பொறுப்பதாரி நிஷாந்த விஜேரத்ன உள்ளிட்ட குழுவினரால் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
சில காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் இந்தத் துறவி குறித்து ரங்கலா பொலிஸ் மேலும் விசாரணை நடத்தி வருகிறது.
(வீடியோ இங்கே )