இலங்கையின் பல மாகாணங்களில் கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுப்பு
மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா, வடமேற்கு, வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் கடுமையான மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதால், வானிலை ஆய்வுத் துறையால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (09) காலை 11.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, இரவு 11.30 மணி வரை அமலில் இருக்கும்.
அதன்படி, பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது, குறிப்பிட்ட சில பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அது மேலும் கூறியுள்ளது.
மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )