போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் பேருந்துகளை செலுத்திய சாரதிகள் கைது!

#SriLanka #Arrest #drugs #Lanka4 #Driver #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் பேருந்துகளை செலுத்திய சாரதிகள் கைது!

கம்பஹா - கடவத்தை பேருந்து நிலையத்தில் நேற்று (12) முன்னெடுக்கப்பட்ட விசேட போதைப்பொருள் சோதனையின் போது, 07 பேருந்து ஊழியர்கள் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் சிக்கியுள்ளனர்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் விசேட திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பு குறித்த முக்கிய தகவல்கள்: கடவத்தை பேருந்து நிலையத்தில் மொத்தம் 148 சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்களில் 07 பேர் அபாயகரமான போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், போதைப்பொருள் அற்ற ஒழுக்கமான பொதுப் போக்குவரத்து சேவையை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பிடிபட்ட ஊழியர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளுடன், நிறுவன ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4