லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 13 பேர் உயிரிழப்பு
தெற்கு லெபனானில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கஃபார் டூனினில் உள்ள ஒரு வீடு தாக்கப்பட்டதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர்.
அதனை தொடர்ந்து, நபாட்டியேவில் இஸ்ரேலியத் தாக்குதலில் அரசு நடத்தும் லெபனானிய குடிமைப் பாதுகாப்பு அவசர சேவையைச் சேர்ந்த இரண்டு துணை மருத்துவப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாகவும், மூன்றாவது நபர் காயமடைந்ததாகவும் கூறியது.
முன்னதாக நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன், நபாட்டியாவில் ஹுசைன் ஜாபர் மற்றும் அஹ்மத் நூரா என அடையாளம் காணப்பட்ட இரண்டு குடிமைப் பாதுகாப்பு உறுப்பினர்கள் கொல்லப்பட்டதற்கு "துக்கத்தையும் வருத்தத்தையும்" வெளிப்படுத்தியுள்ளார்.
(வீடியோ இங்கே )