உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடியாக அதிகரிப்பு!

#SriLanka #prices #Lanka4 #Market #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடியாக அதிகரிப்பு!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் ஏற்பட்டுள்ள கடுமையான ராஜதந்திர மற்றும் இராணுவ முறுகல் நிலை காரணமாக, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் அதிரடியாக அதிகரித்துள்ளன.

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உடன்பாடுகள் எட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஆகியோரின் சமீபத்திய கடுமையான கருத்துக்களால் சரிவடைந்துள்ளது.

தற்காலிக போர்நிறுத்தம் அமுலில் உள்ள போதிலும், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு அதிகரித்துள்ளதால், ஹோர்முஸ் நீரிணை விரைவாக திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மங்கிப்போயுள்ளதாக சர்வதேச சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, உலகளாவிய சந்தையில் வாராந்த அடிப்படையில் எண்ணெய் விலைகள் 7 முதல் 10 சதவீதம் வரை உயர்வடைந்துள்ளன.

பீப்பாய் ஒன்றின் விலை 3.35% அதிகரித்து 109.26 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. (இந்த வாரத்தில் மட்டும் 7.84% அதிகரிப்பு) பீப்பாய் ஒன்றின் விலை 4.2% அதிகரித்து 105.42 அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது. 

(இந்த வாரத்தில் மட்டும் 10.48% அதிகரிப்பு) உலகளாவிய மசகு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கடத்தப்படும் நிலையில், அங்கு நிலவும் பதற்றமான சூழல் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!