ரயில் தடம் புரண்டு விபத்து - 12 பேர் காயம்!

#SriLanka #Accident #Train
Thamilini
1 month ago
ரயில் தடம் புரண்டு விபத்து - 12 பேர் காயம்!

வனவசல மற்றும் ஹுனுபிட்டிய இடையேயான ரயில் பாதையில் இன்று ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர். . 

பொல்கஹவெலவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்டதில், ஒரு பெட்டி கவிழ்ந்தது. இதில் பன்னிரண்டு பயணிகள் காயமடைந்தனர். 

 காயமடைந்த பயணிகள் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும், மேலும் காயமடைந்த ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் (ASP) எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4