இந்தியாவில் இரண்டு நாட்களில் வெப்ப தாக்குதல் காரணமாக 40 பேர் உயிரிழப்பு

#India #Death #Lanka4 #heat #Climate #L4
Prasu
12 hours ago
இந்தியாவில் இரண்டு நாட்களில் வெப்ப தாக்குதல் காரணமாக 40 பேர் உயிரிழப்பு

தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் நிலவி வரும் கடும் வெப்ப அலையைத் தொடர்ந்து, வெப்பத்தாக்கத்தால் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸ் வரை சுட்டெரித்துள்ளது. இந்த 40 இறப்புகளில் 30 தெலங்கானாவில் மட்டுமே நிகழ்ந்துள்ளது.

வாரங்கல் மாவட்டத்தில் சுமார் 19 இறப்புகள் பதிவாகியுள்ளன. நல்கொண்டா, கரீம்நகர் மற்றும் கம்மம் ஆகிய மாவட்டங்களில் தலா ஆறு பேரும், ஆதில்பாத்தில் இருவரும், நிஜாமாபாத்தில் ஒருவரும் உயிரிழந்தனர்.

ஆந்திரப் பிரதேசத்தில், விஜயவாடா நகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வெப்பத்தாக்கத்தால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடுமையான வெப்பம் காரணமாக கால்நடைகளும் இறந்து வருகின்றன. மேடக் மாவட்டத்தில் வெப்பத்தாக்குதல் காரணமாக ஒரு காளை உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!