இந்தியாவில் எபோலா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள உகாண்டா பெண்

#India #Women #Disease #LANKA4 #Virus #L4 #isolate
Prasu
3 months ago
இந்தியாவில் எபோலா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள உகாண்டா பெண்

எபோலா தொற்று சந்தேகத்தின் பேரில், உகாண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பெங்களூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

28 வயதான குறித்த பெண்ணிற்கு லேசான உடல் வலி ஏற்பட்டுள்ளதாகவும் மற்றபடி அவர் நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண்ணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் 2014ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் பதிவாகிய முதல் எபோலா தொற்றாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ள இந்த நோயின் எந்தவொரு பாதிப்பையும் இந்தியா இதுவரை பதிவு செய்யவில்லை என்று சுகாதார அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4