மும்பையில் அவசரமாக தரையிறங்கிய சுவிஸ் விமானம்
மும்பையில் இருந்து 231 பயணிகளுடன் சூரிச் புறப்பட்ட விமானம், சுமார் 20 தொன் எரிபொருளை வானில் எரித்த பின்னர் மீண்டும் மும்பையிலேயே தரையிறங்கியுள்ளது.
மும்பையிலிருந்து LX155 என்ற சுவிஸ் விமானம் இந்தியாவிலிருந்து புறப்பட்டது, ஆனால் 5 மணி 20 நிமிடங்களுக்குப் பின்னர் மும்பையில் உள்ள அதன் புறப்பட்ட விமான நிலையத்திலேயே மீண்டும் தரையிறங்கியது.
ஆரம்பத்தில், விமானம் திட்டமிட்டபடி பயணித்த போதும், இரண்டு மணி நேர பயணத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் எல்லையை அடைவதற்குச் சற்று முன்னதாக விமானிகள் விமானத்தைத் திருப்பினர்.
விமானத்தின் மின்சார அமைப்பில் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டு அதனை சீர்படுத்தும் முயற்சி வெற்றியளிக்கவில்லை.
இதன் பின்னர் ஏர்பஸ் ஏ330 மும்பைக்குத் திரும்பியது. இருப்பினும், தரையிறங்குவதற்கு முன்பு, அந்த விமானம் அரபிக்கடலுக்கு மேலே 130 நிமிடங்கள் வட்டமிட வேண்டியிருந்தது.
அது கிட்டத்தட்ட 4,000 மீட்டர் உயரத்தில் மொத்தம் 15 தடவைகள் வட்டமடித்துள்ளது.
ஏர்பஸ் ஏ330ல் காற்றில் எரிபொருளை வெளியேற்றும் அமைப்பு இல்லை. எனவே, நீண்ட நேரம் வட்டமிடுவதன் மூலம் எரிபொருளை எரிக்க வேண்டியிருந்தது.
---------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )