ஹொரணையில் சோகம் : கணவனின் உயிரை பறித்த மனைவி!
#SriLanka
#Crime
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
13 hours ago
ஹொரணை, அரம்பகந்த பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கம் கொலையில் முடிந்துள்ளது.
வாயத்தர்க்கம் முற்றிய நிலையில் கணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் அரம்பகந்த, ஹொரணை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபராவார்.
சம்பவம் தொடர்பில் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் நீதவான் விசாரணைக்காக சம்பவ இடத்திலேயே பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹொரணை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
