இந்தியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஆஸ்திரேலியாவை சேர்ந்த கணித ஆசிரியர்
இந்தியாவில் கடந்த மாதம் மாயமான ஆஸ்திரேலியாவை சேர்ந்த கணித ஆசிரியர் சுனில் சர்மா, அவரது சகோதரராலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
66 வயதான சுனில் சர்மா, தனது பணி ஓய்வுக் காலத்தைத் திட்டமிட்டு வந்த நிலையில், வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகருக்குச் சென்றிருந்தார்.
அங்கு தனக்குச் சொந்தமான சொத்து ஒன்றை விற்பனை செய்வதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோதே, கடந்த மே 22ம் திகதி அவர் திடீரென காணாமல் போனார்.
சுனில் சர்மாவுக்கு தூக்க மாத்திரைகள் கலந்த பானத்தைக் கொடுத்து, பின்னர் மட்டையால் தலையில் பலமாகத் தாக்கி சதீஷ் சர்மா அவரைக் கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
“கொலைக்குப் பிறகு இரத்தக் கறை படிந்த மெத்தை மற்றும் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட பேஸ்பால் மட்டை ஆகியவற்றை அகற்றுவதற்கு சதீஷ் சர்மாவின் மனைவியும் மகனும் உதவியுள்ளனர்” என்று தெரிவித்தார்.
மேலும், இந்த மூன்று பேரும் சேர்ந்து உடலை ஒரு கால்வாயில் வீசியுள்ளதாகவும், உடலை மீட்பதற்கான தேடுதல் பணிகளில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
---------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )