நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மழையுடன் கூடிய வானிலை நிலவும்!
மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மத்திய உயர்நிலங்களின் மேற்குச் சரிவுகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு சுமார் 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
மற்ற பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு சுமார் 30-40 கி.மீ வேகத்தில் மிதமான காற்று வீச வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் பொதுமக்களை வலியுறுத்துகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே