வடமாகாண தமிழ்த்தினப் வில்லிசைப் போட்டியில் யூனியன் கல்லூரி மகத்தான வெற்றி - தேசியமட்டத்திற்கு தெரிவு
#SriLanka
#Jaffna
#Lanka4
#competition
#L4
Prasu
3 hours ago
வடமாகாண தமிழ்த்தினப் வில்லிசைப் போட்டியில் யூனியன் கல்லூரி மகத்தான வெற்றியை பெற்று தேசியமட்டத்திற்கு தெரிவாகியுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற வடமாகாண தமிழ்த்தினப் வில்லிசைப் போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியும் சமநிலைப் பெறுபேற்றைப் பெற்றிருந்தன.
இதனையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி நேற்று (28.06.2026) ஞாயிறு நடைபெற்றது. இதில் மிகுந்த திறமையுடனும் தன்னம்பிக்கையுடனும் போட்டியிட்ட தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மகத்தான வெற்றியைப் பெற்று வடமாகாண மட்டத்தில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டனர்.
கல்லூரி அதிபருக்கும், பொறுப்பாசிரியர் அருட்பணி. ராஜ்குமார் அவர்களுக்கும் ஆகியோர் இவ்வெற்றிக்காக மாணவர்களை அர்ப்பணிப்புடன் வழிநடத்தியதாக பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே