நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இப்பகுதிகளில் சில இடங்களில் 50 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என்றும், ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.
அதேபோல் மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 40 - 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே