வெனிசுலா நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை உச்சத்தை தொட்டது! பல்லாயிரக்கணக்கானோர் மாயம்!
வெனிசுலாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,295 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் இன்று (02) ஏழாவது நாளாகத் தொடர்கின்றன.
இருப்பினும் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதிலும், இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் நாட்டின் புதிய அரசாங்கம் கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ளது.
சமீபத்திய அறிக்கைகளின்படி, இந்தப் பேரழிவில் 11,267 பேர் காயமடைந்துள்ளனர். பிரதான நிலநடுக்கத்திற்குப் பிறகு 782 பின் அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
ஆனால் அதன் வலிமை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
4,000-க்கும் மேற்பட்ட சர்வதேச மீட்புப் பணியாளர்கள், 26,000 வெனிசுலா இராணுவம், காவல்துறை, தீயணைப்பு வீரர்கள் மற்றும் 17,800-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே அங்கு சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே