நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்கு காரணமான கைதி இடமாற்றம்
#SriLanka
#Prison
#Lanka4
#prisoner
#L4
#clash
Prasu
13 hours ago
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்குக் காரணமானவர் எனக் கூறப்படும் 'கட்டுவெல்லேகம சுரேஷ்' என்பவர் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பாதாள உலகக் குழு உறுப்பினரான 'கெஹெல்பத்தற பத்மே' என்பவரின் நெருங்கிய கூட்டாளி எனக் கூறப்படும் கட்டுவெல்லேகம சுரேஷ் மீது, கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்துதல், கொள்ளையடித்தல், போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே