“இப்போதே செயல்படுங்கள்! உங்கள் கணக்கு ஒரு மணி நேரத்தில் முடக்கப்படும்" - மத்திய வங்கி விடுத்த அவசர எச்சரிக்கை!
பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றி, தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களைப் பெறுவதற்காக, மோசடி கும்பல் ஒன்று இயங்கி வருவதாக இலங்கை மத்திய வங்கி அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இது தொடர்பில் மத்தியவங்கி வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில், "இப்போதே செயல்படுங்கள்! உங்கள் கணக்கு ஒரு மணி நேரத்தில் முடக்கப்படும்" போன்ற பீதியூட்டும் செய்திகளை அனுப்புவதன் மூலம், மோசடிக்காரர்கள் பெரும்பாலும் மக்களை சிந்திக்காமல் செயற்படுத்த வற்புறுத்துவதாக தெரிவித்துள்ளது.
நிதி மோசடிகளில் அவசரம் என்பது ஒரு முக்கிய எச்சரிக்கை அறிகுறியாகும், ஏனெனில் மோசடிக்காரர்கள் பயத்தையும் பீதியையும் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை அவசர முடிவுகளை எடுக்கத் தூண்டுகிறார்கள் என்று மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
உடனடி நடவடிக்கை தேவை என்று கூறும் எதிர்பாராத செய்திகள் அல்லது அழைப்புகள், குறிப்பாக வங்கிக் கணக்குகள், பணம் செலுத்துதல் அல்லது தனிப்பட்ட தகவல்கள் தொடர்பானவை வரும்போது, பொதுமக்கள் சற்று நிறுத்தி சரிபார்க்குமாறு வங்கி அறிவுறுத்தியுள்ளது.
நிதி நுகர்வோருக்குக் கல்வி கற்பிப்பதற்கும், இணையவழி மோசடி மற்றும் இணையவழி நிதி மோசடிகளின் அபாயத்தைக் குறைப்பதற்கும் மத்திய வங்கி மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் அமைந்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே