சாரதியின் கட்டுப்பாட்டை மீறி பயணித்த பேருந்து : ஆற்றில் பாய்ந்து விபத்து!
#SriLanka
#Accident
#NuwaraEliya
#Bus
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 weeks ago
நுவரெலியாவில் உள்ள கிரிகோரி ஏரி அருகே தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்தானது தலகல ஓயா ஆற்றில் கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா–சாந்திபுர வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த அந்தப் பேருந்தை நிறுத்த முயன்றபோது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால், இந்த விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து நடந்த நேரத்தில் ஓட்டுநரும் நடத்துநரும் மட்டுமே பேருந்தில் இருந்ததாகவும், இருவரும் நலமுடன் இருப்பதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே