தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு தொற்றாளர்கள் : 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
இலங்கையில் பதிவாகும் டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றைய (12) நிலவரப்படி, இந்த ஆண்டில் பதிவான மொத்த டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 68,672 ஐ தொட்டுள்ளது.
ஜூலை 11 ஆம் திகதிவரை 68,071 பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும், ஒரே நாளில் 601 பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 14,112 பாதிப்புகளும், அதைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 13,791 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், ஜூலை மாதத்தின் முதல் 12 நாட்களில் 13,293 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டில் இதுவரை பதிவான அதிகபட்ச மாதாந்திர பாதிப்பு எண்ணிக்கை ஜூன் மாதத்தில் 21,538 ஆக இருந்தது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு, இந்த ஆண்டில் இதுவரை டெங்குவால் 47 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே