முன்னாள் அமீருக்கு அஞ்சலி செலுத்த கத்தார் புறப்பட்ட பிரதமர் ஹரினி அமரசூரிய
திங்கட்கிழமை காலமான கத்தார் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் ஹரினி அமரசூரிய கத்தார் புறப்பட்டுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, முன்னாள் அமீரின் மறைவுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் இரங்கலை பிரதமர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்க உள்ளார்.
இந்தப் பயணம், இலங்கைக்கும் கத்தாருக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இலங்கையின் உறுதிப்பாட்டையும் எடுத்துக்காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக, பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதே விமானத்தில் தோஹாவுக்குப் புறப்பட்டனர்.
விமான நிலைய வட்டாரங்களின்படி, இந்தத் தூதுக்குழுவினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) மாலை 6.50 மணிக்கு, தோஹா நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL217ல் புறப்பட்டனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே