மஹாபொல தொடர்பாக வெளியான முக்கிய அறிவிப்பு!
2024–2025 கல்வியாண்டுக்கான மஹாபொல கல்வி உதவித்தொகைக்கு தேர்வான மாணவர்களின் இறுதித் தெரிவுப்பட்டியல் அந்தந்தப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக லலித் அதுலத்முதலி மஹாபொல உயர்கல்வி உதவித்தொகை நிதியம் அறிவித்துள்ளது.
இறுதித் தெரிவில் இடம்பெற்றுள்ள மாணவர்கள், 2026 ஆகஸ்ட் 17 ஆம் திகதிக்குள் தங்களது தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி மஹாபொல இணையதளத்தில் இணையவழிப் பதிவை கட்டாயம் நிறைவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பதிவை நிறைவு செய்த பின்னர், விண்ணப்பத்தை அச்சிட்டு கையொப்பமிட்டு, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் அல்லது வங்கிக் கணக்கு உறுதிப்படுத்தல் சான்றிதழுடன் தங்களது பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், மஹாபொல கல்வி உதவித்தொகை கொடுப்பனவுகள் விண்ணப்பதாரரின் பெயரில் இலங்கை வங்கி அல்லது மக்கள் வங்கி ஆகியவற்றில் பராமரிக்கப்படும் தனிப்பட்ட சேமிப்பு அல்லது நடப்புக் கணக்குகளுக்கு மட்டுமே வரவு வைக்கப்படும் என்றும் நிதியம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, 2024–2025 மஹாபொல கல்வி உதவித்தொகைக்கு தெரிவு செய்யப்படாத மாணவர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், தங்களது பல்கலைக்கழகங்கள் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவற்றை 2026 ஒக்டோபர் 15 ஆம் திகதிக்குள் அல்லது அதற்கு முன்னர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே