ஊழல் தடுப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம் - வர்த்தமானி வெளியீடு!
#SriLanka
#Gazette
#corruption
#AnuraKumaraDissanayake
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
ஊழல் தடுப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அதற்கேற்ற திருத்தங்களைப் பரிந்துரைக்கும் சட்டமூலம் ஒன்று தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்மொழியப்பட்ட ஊழல் தடுப்பு (திருத்த) சட்டமூலத்தை தாக்கல் செய்துள்ளார்.
இந்த சட்டமூலம் நேற்று (27) விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுடன், 2023-ஆம் ஆண்டின் 9-ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தைத் திருத்த முற்படுகிறது.
வர்த்தமானியில் வெளியிடப்பட்ட மசோதாவின்படி, முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம் தற்போதுள்ள சட்டத்தில் பல திருத்தங்களை அறிமுகப்படுத்துகிறது.
மேலும் குறித்த சட்டமூலம்பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே