கிரிக்கெட் மறுசீரமைப்பு: அனுராவின் விசேட ஆலோசனை!
இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதில் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மறுசீரமைப்புக் குழுவினருடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விசேட கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில், இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்பும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் கிரிக்கெட் விளையாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படக்கூடிய ஆதரவுகள் மற்றும் பங்களிப்புகள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.
குறித்த சந்திப்பில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஸ்ரீலங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவின் தலைவர் எரான் விக்ரமரத்ன மற்றும் அதன் ஏனைய உறுப்பினர்களான ரொஷான் மஹாநாம, அவந்தி கொழம்பகே, துஷிர ரதெல்ல, சிதத் வெத்தமுனி உட்பட முக்கிய பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே