பெருவின் 9வது ஜனாதிபதியாக பதவியேற்ற கெய்கோ புஜிமோரி
அதிகரித்து வரும் குற்றங்கள் குறித்த வாக்காளர்களின் அச்சங்கள் மற்றும் அவரது சர்வாதிகாரத் தந்தையான ஆல்பர்டோ ஃபுஜிமோரியின் மரபு குறித்த நீடித்த பிளவுகள் இருந்தபோதிலும், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கெய்கோ ஃபுஜிமோரி பெருவின் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
பழமைவாதக் கொள்கைகளைக் கொண்ட 51 வயதான இவர், இதற்கு முன்னர் மூன்று முறை ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், ஜூன் மாதம் நடந்த இரண்டாம் கட்டத் தேர்தலில் இடதுசாரி போட்டியாளரான ராபர்டோ சான்செஸை 50,000க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
பல ஆண்டுகளாக நீடித்த அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு, பதவிக்காலம் முடிவதற்குள் பல ஜனாதிபதிகள் நீக்கப்பட்டும், ராஜினாமா செய்தும் அல்லது மாற்றப்பட்டும் வந்த நிலையில், ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதாக உறுதியளித்து, ஒரு தசாப்தத்தில் பெருவின் ஒன்பதாவது ஜனாதிபதியாக இவர் பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில், "குடியரசின் ஜனாதிபதி கடமைகளை நான் உண்மையுடன் நிறைவேற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்" என்று தனது பதவியேற்பு விழாவின் போது ஃபுஜிமோரி காங்கிரஸிடம் குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே