ஹீத்ரோவில் விமானத்தில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொறியாளர் மரணம்

#Death #Airport #LANKA4 #ENGLAND #Engineer #L4
Prasu
1 month ago
ஹீத்ரோவில் விமானத்தில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொறியாளர் மரணம்

ஹீத்ரோ விமான நிலையத்தில் ஒரு வர்த்தக விமானத்தில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது காயமடைந்த விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்தின் பொறியாளர் ஒருவர், கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு உயிரிழந்துள்ளார்.

23 வயதான ஜார்ஜி பக்ஸ்டன், போயிங் 787-9 டிரீம்லைனர் விமானத்தில் பணிபுரிந்தபோது படுகாயமடைந்ததாக நம்பப்படுகிறது.

இந்தச் சம்பவம் ஜூன் 11ம் திகதி நடந்ததாகவும், அவர் ஜூலை 7 ஆம் திகதி மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

தங்கள் பொறியியல் குழுவில் "மிகவும் நேசிக்கப்பட்ட" ஒரு உறுப்பினரின் மரணத்தை உறுதிப்படுத்துவதில் "இதயம் நொறுங்கியுள்ளது" என்று விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், என்ன நடந்தது என்பதைக் கண்டறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!