மனிதப் பிணைப்புகளில் தாக்கம் செலுத்தும் கையடக்க தொலைபேசி - பேராயர் ஆதங்கம்!
அதீத கைபேசிப் பயன்பாடு மற்றும் நவீன தொழில்நுட்பம் ஆகியவை குடும்ப உறவுகள் மற்றும் சமூகத்தில் உள்ள மனிதப் பிணைப்புகளில் தாக்கம் செலுத்துவதாக கொழும்பு பேராயர் மேன்மைமிகு மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
சீதுவவில் நடைபெற்ற சமயக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், , தாராளமயப் பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட நுகர்வோர் கலாச்சாரத்தின் வளர்ச்சி, மக்களிடையே செயற்கையான ஆசைகளை உருவாக்கியுள்ளது என்றும், பண வேட்கையே நவீன சமூகத்தைப் பாதிக்கும் ஒரு முக்கிய காரணியாக மாறியுள்ளது என்றும் கூறினார்.
சந்தை சார்ந்த நுகர்வோர் கலாச்சாரம், உண்மையான தேவைகள் மற்றும் விழுமியங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, தேவையற்ற உடைமைகளையும் விருப்பங்களையும் தேடுவதற்கு மக்களை ஊக்குவித்துள்ளது என்று கர்தினால் குறிப்பிட்டார்.
மேலும், கைபேசிகள் மீதான அதிகரித்து வரும் சார்புநிலையையும் அவர் விமர்சித்தார்; ஆரம்பத்தில் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் இப்போது மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே