இசை உலகின் பெரும் இழப்பு: பழம்பெரும் பின்னணி பாடகி ஜமுனா ராணி காலமானார் .
#India
#Cinema
#Legend
#Lanka4
#Music
#Singer
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 hours ago
தமிழ் திரையுலகின் பழம்பெரும் பின்னணிப் பாடகி ஜமுனா ராணி வயது முதிர்வு காரணமாக காலமானார்.
அவரது மறைவு செய்தி அறிந்த திரையுலகினரும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் சிங்களம் ஆகிய பல மொழிகளில் 6,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, இந்தியத் திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரையைப் பதித்தவர் பாடகி ஜமுனா ராணி.
‘யாரடி நீ மோகினி’, ‘குங்குமப் பூவே’ போன்ற காலத்தால் அழியாத பல சூப்பர் ஹிட் பாடல்களையும், நடிகை ஸ்ரீதேவி நடித்த பல்வேறு திரைப்படங்களிலும் தனது இனிமையான குரலால் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர்.
பல தலைமுறை ரசிகர்களைக் கவர்ந்த இவரது மறைவு, ஒட்டுமொத்த இசை உலகிற்கும் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே