ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறிய வழக்கு: முக்கியத் தீர்ப்பை அறிவிக்கவுள்ளது மேல் நீதிமன்றம்!
#SriLanka
#Lanka4
#Highway
#Court
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
2 hours ago
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் சற்று நேரத்திற்கு முன்னர் நீதிமன்றத்திற்கு வந்தடைந்தனர்.
உளவுத்துறைத் தகவல்கள் கிடைத்தபோதிலும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் கடமை தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தொடர்பான தீர்ப்புக்காகவே வருகை தந்துள்ளனர்.
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அறிவிக்கப்படவுள்ளது.
குறித்த இருவருக்கும் எதிரான வழக்கின் விசாரணை அண்மையில் முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே