அஸ்வெசும நலன்புரி தொகை மோசடி : நுவரெலியா நோர்வூட் பகுதியில் இரு பெண் உத்தியோகஸ்தர்கள் கைது!
#SriLanka
#Arrest
#NuwaraEliya
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய சுமார் 30 லட்சம் இலட்சம் அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் இரண்டு அதிகாரிகள், கைது செய்யப்பட்டுள்ளனர்.
33 மற்றும் 30 வயதுடைய இரு பெண் உத்தியோகஸ்தர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் 2025 ஆம் ஆண்டு முதல் சுமார் 29 இலட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாவை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வூழல் மோசடியில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் தொடர்பில தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இருவரும் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே