சிவப்பு எச்சரிக்கை - மறு அறிவிப்பு வரை கடலுக்கு செல்ல வேண்டாம் !
காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலவக்கூடும் என வானிலை ஆய்வுத் துறை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கடல் பகுதிகளில் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்றும், மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் மிக பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை இந்தக் கடல் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கடற்படை மற்றும் மீன்பிடித் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், புத்தளம் முதல் கொழும்பு வழியாக காலி வரையிலான கடல் பகுதிகளிலும் கொந்தளிப்பான சூழல் நிலவும் என்றும், மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் செயல்படும் கடற்படை மற்றும் மீன்பிடித் துறையினர் விழிப்புடன் இருக்குமாறும், எதிர்கால வானிலை அறிவிப்புகள் மற்றும் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் வானிலை ஆய்வுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே