உதயநிதி பேச்சு : திரிஷாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என குஷ்பு வலியுறுத்தல்!
#India
#Trisha
#Lanka4
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
#Speech
Lakhi
1 hour ago
நடிகையும், பாஜக மாநில துணைத் தலைவருமான குஷ்பு சுந்தர், உதயநிதி ஸ்டாலின் பேசியதாகக் கூறப்படும் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உதயநிதியின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், நடிகை திரிஷா குறித்து பொது மேடையில் அவமரியாதையாக பேசியிருந்தால், அதற்காக நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உதயநிதியின் பேச்சு தரம் தாழ்ந்தது, மலிவானது மற்றும் இழிவானது என விமர்சித்துள்ள குஷ்பு மேலும், தனது தவறை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்கும் பொறுப்புணர்வும் கண்ணியமும் உதயநிதியிடம் உள்ளதா என்பதை காலமே நிரூபிக்கும் என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தமிழக அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே