பசில் ராஜபக்ஷவை நாட்டுக்குக் கொண்டுவர அமெரிக்க நீதிமன்றத்தின் உதவியை நாட அரசு தீர்மானம்!
#SriLanka
#Basil Rajapaksa
#government
#Lanka4
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
2 hours ago
மாத்தறை நீதிமன்றில் நிலுவையிலுள்ள வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர அமெரிக்க நீதிமன்றத்தின் உதவியைப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச பொலிஸின் ஒத்துழைப்புடன் இந்த சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இலங்கைக்குத் தேவையான சந்தேகநபர் ஒருவர் வேறு நாட்டில் வசித்தாலும், அவர் அந்நாட்டின் பிரஜையாக இருக்கும் பட்சத்தில், அவரைப் பொறுப்பேற்பதற்கு அந்நாட்டு நீதிமன்றக் கட்டமைப்பின் வழிகாட்டுதலையும் அனுமதியையும் பெறுவது அவசியமானது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே