அரச பங்களாக்கள் தனியார் முதலீடுகளுக்கு: அரசாங்கம் புதிய நடவடிக்கை!
அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ அரச பங்களாக்களைப் பயன்படுத்துவதில்லை என்ற தீர்மானத்திற்கு அமைவாக, கொழும்பில் அமைந்துள்ள 7 அரசுக்குச் சொந்தமான பங்களாக்களைப் பயனுள்ள பொருளாதார நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்குத் தகுதியான தரப்பினரிடமிருந்து நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு யோசனைகளைக் கோரியுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கமைய, 24 பங்களாக்களை பொது-தனியார் பங்களிப்பு அடிப்படையில் 30 வருட காலத்திற்கு குத்தகைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் முதற்கட்டமாக 7 பங்களாக்கள் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய பங்களாக்களே இவ்வாறு உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக குத்தகைக்கு விடப்படவுள்ளன.
இதற்கான பிரேரணைகளை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 25ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே