ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரானிய அதிகாரிகள் மீது புதிய தடைகளை அறிவித்த கனடா
"சர்வதேச அமைதியைக் குலைக்கும்" ஹோர்முஸ் ஜலசந்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக ஐந்து மூத்த ஈரானிய அதிகாரிகள் மீது தடைகள் விதிக்கப்படும் என கனடாவின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
"ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரம், உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்திப் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது. இன்றைய தடைகள், இந்தக் கொள்கைகளைக் குலைத்து, உலகப் பொருளாதாரம் மற்றும் எரிசக்திப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் தனிநபர்களை இலக்காகக் கொண்டுள்ளன," என்று வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"ஒரு முக்கியமான சர்வதேச நீர்வழிக்கு அச்சுறுத்தலாக விளங்கிய நடவடிக்கைகளுக்காக," இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) உறுப்பினர்கள் உட்பட, ஈரான் இஸ்லாமியக் குடியரசின் மூத்த அதிகாரிகள் மீது இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன என குளோபல் அஃபயர்ஸ் கனடா வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
- அலி அப்துல்லாஹி - கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் தளபதி மற்றும் ஒரு மூத்த IRGC அதிகாரி.
- லெப்டினன்ட் கர்னல் இப்ராஹிம் ஸோல்ஃபகாரி - கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர்.
- இப்ராஹிம் அஸிஸி - நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் தலைவர்.
- ஷஹ்ராம் இரானி - ஈரான் இஸ்லாமியக் குடியரசின் கடற்படையான ஆர்தேஷின் தளபதி.
- ஹமீத் ஹொசைனி - ஈரானிய எண்ணெய், எரிவாயு மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இயக்குநர் குழுவின் தலைவர் மற்றும் செய்தித் தொடர்பாளர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே