சிறுமி மீதான குற்றச்சாட்டு: தேரருடன் பொருந்தும் DNA சான்று நீதிமன்றில்!
அனுராதபுர அட்மஸ்தானத்தின் முன்னாள் அதிபதி பேல்லேகம ஹேமரத்தன தேரர் மீது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கில் முக்கிய அறிவியல் சான்றுகள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த விகாரையிலிருந்து கைப்பற்றப்பட்ட பாயில் இருந்ததாக கூறப்படும் விந்து மாதிரி, சந்தேகநபரான தேரரின் DNA உடன் பொருந்துவதாக அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கை தெரிவித்துள்ளதாக பொலிஸார் அனுராதபுர பிரதம நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவியல் சான்று, சிறுமி வழங்கிய வாக்குமூலத்தை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர் நீதிமன்ற பாதுகாப்பு நடைமுறைகளை மீறி, நீதிபதிகளுக்கான சிறப்பு நுழைவாயில் வழியாக நுழைந்ததாக சிறுமி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உடனடி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்ற பாதுகாப்புப் பிரிவுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சிறுமியின் தாயாரும் மனிதக் கடத்தல் மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வழக்கு விசாரணை: 08 ஜனவரி 2027 குற்றச்சாட்டுகள் தொடர்பான இறுதி முடிவு நீதிமன்ற விசாரணையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே