பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் இந்து வியாபாரி ஒருவர் சுட்டுக் கொலை

#Hindu #Murder #Pakistan #LANKA4 #GunShoot #Bussinessman #L4
Prasu
2 hours ago
பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் இந்து வியாபாரி ஒருவர் சுட்டுக் கொலை

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில், இந்து வியாபாரியான ராகேஷ் குமார் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நொஷ்கி பஜாரின் காதிராபாத் ஸ்டாப் பகுதியில் உள்ள அவரது கடைக்குள் சில ஆயுததாரிகள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு உயிரிழந்தவர் ராகேஷ் குமார் என அடையாளம் காணப்பட்டார். பின்னர், அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4