22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக 67 மனுக்கள் தாக்கல்!
#SriLanka
#LANKA4
#Amendment
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
2 hours ago
இலங்கை வரலாற்றில், அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலமொன்றுக்கு எதிராக சாதனை அளவாக 67 எழுத்தாணைத் தீர்மான மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (1) முற்பகல் 10 மணிக்கு ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் ஆரம்பமாகவுள்ளது.
22ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ முரணானதா என்பதையும், அவ்வாறு முரணானதாக இருப்பின் அதற்கு நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் மக்கள் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெற வேண்டுமா என்பதையும் நீதிமன்றம் ஆராயவுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே