அசாமில் மனைவி மற்றும் 3 குழந்தைகளைக் கொன்ற நபர் கைது
அசாமின் ஜோனாய் பகுதியில், ஒரு பள்ளி ஆசிரியர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை அரிவாள் தாக்குதல் மூலம் கொலை செய்துள்ளார்.
55 வயதான ஃபிரோஸ் அலி என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், காவலில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அந்த நபர், தனது மனைவி மற்றும் மூன்று சிறு குழந்தைகள் உட்பட தனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை அரிவாளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் 33 வயது சினுவாரா பேகம், 13 வயது நைனா அக்தர், 8 வயது சகில் அலிமற்றும் 5 வயது ரிஜிகா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாகத் தனது குடும்பத்தைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
"என் குடும்பத்தைக் காப்பாற்ற நான் மாதம் ரூ.10,000 சம்பாதிப்பதால், நான் நிதி நெருக்கடியில் இருந்தேன். அதனால், என் மனைவியையும் குழந்தைகளையும் கொன்றுவிட்டேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே