செப்.10க்கு முன்னர் சட்டவிரோத கரையோர கட்டடங்களை அகற்றுமாறு உத்தரவு

#SriLanka #Hotel #LANKA4 #illegal #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
2 hours ago
செப்.10க்கு முன்னர் சட்டவிரோத கரையோர கட்டடங்களை அகற்றுமாறு உத்தரவு

பம்பலப்பிட்டி முதல் தெஹிவளை வரையிலான கரையோரப் பகுதியில் அனுமதியின்றி இயங்கிவரும் விடுதிகள் மற்றும் ஏனைய கட்டுமானங்களை எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறு அதிகாரிகளால் உத்தரவிடப்பட்டுள்ளதாக அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

அதன்படி, கரையோர வலயத்துக்குள் அனுமதியின்றி நடத்தப்படும் வர்த்தக நிலையங்கள் மற்றும் கட்டுமானங்களை உடனடியாக அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

கரையோரப் பிரதேசத்துக்குள் எவ்வித அனுமதியுமின்றி மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளின் ஒரு கட்டமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் குறித்த சட்டவிரோத கட்டுமானங்களையும் வர்த்தக நிலையங்களையும் அகற்றத் தவறும் நிறுவனங்களுக்கு எதிராகச் சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்க காவல்துறை மற்றும் அதிகாரிகள் தயாராகவுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4