அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை நாடளாவிய பணிப்புறக்கணிப்பு!

#SriLanka #strike #State #LANKA4 #University #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
4 hours ago
அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை நாடளாவிய பணிப்புறக்கணிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றும் விரிவுரையாளர்கள் நாளை (09) ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

விரிவுரையாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தே இந்த அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றும் விரிவுரையாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஒன்றிணைந்து பங்கேற்கவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

 ⚠️ அரச பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுமா?

விரிவுரையாளர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் மேலும் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4