பொருளாதார சீர்திருத்தத் திட்டம் தொடர்பான மதிப்பாய்வு - ஐ.எம்.எஃப் குழுவினர் இலங்கை வருகை
இலங்கை தனது பொருளாதார சீர்திருத்தத் திட்டம் மற்றும் பரந்த பொருளாதார நிலைப்பாடு குறித்த முக்கிய மதிப்பீட்டை எதிர்கொண்டுள்ள நிலையில், அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவினர் இன்று (10) நாட்டிற்கு வருகைத் தரவுள்ளனர்.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் குழுத் தலைவர் எவன் பாபஜார்ஜியோ (Evan Papageorgiou) தலைமையிலான இக்குழு, வரும் 23 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருக்கும்.
இந்த காலப்பகுதியில், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுத் திட்டத்தின் கீழ் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை இக்குழு மதிப்பிடும்;
அதேவேளையில் பொருளாதார வளர்ச்சி, பொது நிதியியல், வருவாய் திரட்டல், அந்நியச் செலாவணி கையிருப்பு மற்றும் பிற முக்கிய பேரியல் பொருளாதாரக் குறியீடுகள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்களையும் ஆய்வு செய்யும்.
சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் மீளாய்வுகள் வெற்றிகரமாக நிறைவடைவதற்கும், EFF ஏற்பாட்டின் கீழ் நிதியுதவியைத் தொடர்ந்து பெறுவதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதால், இந்த மீளாய்வின் முடிவுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே