லண்டனில் ஈரான் உளவு பிரிவுக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது

#ARREST #LANKA4 #Iran #London #ENGLAND #L4
Prasu
3 hours ago
லண்டனில் ஈரான் உளவு பிரிவுக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது

ஈரானின் வெளிநாட்டு உளவுத்துறைக்கு உதவியதாகக் சந்தேகிக்கப்படும் ஒரு ஆணையும் பெண்ணையும் லண்டனில் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வடக்கு மற்றும் வடமேற்கு லண்டனில் உள்ள சில இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, 42 வயதுடைய பெண் மற்றும் 60 வயதுடைய ஆண் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக மெட்ரோபாலிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 9 அன்று வடமேற்கு லண்டனில் உள்ள மற்றொரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட அந்த ஆணும் பெண்ணும் அக்டோபர் மாதம் ஒரு குறிப்பிட்ட திகதி வரை நிபந்தனையுடன் கூடிய ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4