மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் உரிமங்களை இடைநீக்க தீர்மானம் - விசேட சோதனைக்கும் உத்தரவு
போதைப்பொருள் பயன்படுத்துதல் மற்றும் மது போதையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய குற்றங்களில் ஈடுபடும் ஓட்டுநர்கள் மீதான விசாரணைகளைத் தீவிரப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பிரதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி) டபிள்யூ. பி. ஜே. செனதீரா தெரிவித்தார்.
விபத்துகளைப் பகுப்பாய்வு செய்ததில், நச்சுப் போதைப்பொருட்களின் பயன்பாடு, மது போதையில் வாகனம் ஓட்டுதல், அபாயகரமான மற்றும் கவனக்குறைவான ஓட்டுதல், மற்றும் அதீத சோர்வு ஆகியவையே முக்கிய காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் டிப்பர்கள், லாரிகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பயணிகள் பேருந்துகளின் ஓட்டுநர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் செனதீரா தெரிவித்துள்ளார்.
போதைப்பொருட்களின் தாக்கத்தில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்ட பல பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் ஓட்டுநர் உரிமங்களை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே