மட்டக்களப்பில் திருமணமாகி சில நாட்களிலேயே உயிரிழந்த இளம் பெண்
#SriLanka
#Batticaloa
#Death
#Women
#wedding
#LANKA4
#L4
Prasu
1 hour ago
மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேசத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கிராமத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 16ம் திகதி மகிழடித்தீவு கலாச்சார மண்டபத்தில் பெற்றோரின் ஆசியுடன் திருமணம் நடைபெற்றிருந்த நிலையில், திருமணமாகி சில நாட்களிலேயே குறித்த இளம்பெண் தனது இல்லத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகளின் முடிவிலேயே சம்பவத்திற்கான முழுமையான காரணம் தொடர்பான தகவல்கள் தெரியவரும்.