சவுதி அரேபியாவில் சிறையில் உள்ள அனோஜனை விடுவிக்க கோரி முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம்
#SriLanka
#Protest
#LANKA4
#release
#SaudiArabia
#L4
#SivarasaAnojan
Prasu
2 hours ago
சவுதி அரேபியாவில் சிறையில் உள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்ய கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பினால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிவராசா அனோஜனின் புகைப்படம் மற்றும் தூக்குக் கயிற்றின் உருவம் உள்ளிட்ட குறியீடுகள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும், அவரை விடுதலை செய்யுமாறு கோரும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
மேலும், அனோஜனின் குடும்பத்தின் நிலைமையையும் கருத்திற்கொண்டு, அவரது விடுதலைக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.