நாவில் பார்த்தவுடனே எச்சில் ஊறும் 'சிக்கன் 555' : செய்வது எப்படி?

நாவில் பார்த்தவுடனே எச்சில் ஊறும் 'சிக்கன் 555' : செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :

  • சிக்கன் - 250 கிராம்
  • மிளகாய் தூள் - 1 tbsp
  • மஞ்சள் பொடி - 1 tsp
  • கரம் மசாலா - 1 tsp
  • உப்பு - தேவையான அளவு
  • அரிசி மாவு - 1 tsp
  • ரவை - 1 tbsp
  • எண்ணெய் - 2 tbsp
  • கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :

  1. சிக்கனை சின்ன சின்ன பீஸாக நறுக்கி சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
  2. அதை ஒரு கிண்ணத்தில் போட்டு மிளகாய் தூள், கரம் மசாலா, அரிசி மாவு, மஞ்சள், உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடங்களுக்கு ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள்.
  3. 30 நிமிடங்கள் ஊறியதும் தோசைக் கல் வைத்து எண்ணெய் ஊற்றி ஒவ்வொரு பீஸாக அதன் மீது வைக்கவும்.
  4. அவை பொன்னிறமாகவும், மொறுமொறுவெனவும் வறுபட்டதும் எடுத்துவிட்டு மீதமுள்ள சிக்கனை வையுங்கள்.
  5. இப்படி செய்ததும் இறுதியாக கறிவேப்பிலையை எண்ணெயில் பொறிக்கச் செய்து வறுத்த கறியில் போடவும்.
  6. அவ்வளவுதான் மொறுமொறுவென 555 சிக்கன் தயார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4